முதியவர்களுக்கும் உண்டு தடுப்பூசி! | முதுமை எனும் பூங்காற்று

முதுமைக்கால நோய்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

தொற்று நோய்கள்

உதாரணம்: நிமோனியா, காசநோய், சிறுநீர் தாரையில் பூச்சித் தொல்லை, வயிற்றுப்போக்கு, படை சிரங்கு மற்றும் பேன் மூலம் ஏற்படும் தொல்லைகள். முதியவர்கள் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கும் மற்றும் இறப்பதற்கும் தொற்று நோய்களே ஒரு முக்கியமான காரணமாகும்.

தொற்று அல்லாத நோய்கள்

உதாரணம்: நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, உடற்பருமன், மூட்டுவலி, பக்கவாதம் மற்றும் மறதி நோய். சுமார் 10-15 வருடங்களுக்கு முன்பு முதியவர்கள் தொற்று நோய்களினால் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் சமீப காலத்தில் நகர்புறங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் தொற்று அல்லாத நோய்களே முதியவர்களைத் அதிகம் தாக்குகின்றன.

Representational Image

தொற்று நோய்கள் வர காரணங்கள்

முதுமையில் நோய்களை தடுக்கும் எதிர்ப்பு சக்தி குறைகிறது. சத்துணவு குறைவினாலும் எதிர்ப்பு சக்தி குறையலாம். உடலில் ஏற்படும் மாற்றங்களினாலும் தொற்று நோய்கள் வர வாய்ப்பு அதிகமுண்டு. உதாரணம்: சிராய்ப்பு அல்லது

– தோல் மிகவும் மிருதுபடுவதால் சுலபமாக தோல் புண்கள் ஏற்படலாம்.

– ஆண்களுக்கு பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினால் சிறுநீர்ப்பையில் நீர் தேங்கி பூச்சித் தொல்லைகளுக்கு வழி வகுக்கலாம்.

– பெண்களுக்கு ஹாரமோன் குறைவினால் பிறப்புறுப்புகளில் வறட்சி ஏற்பட்டு பூச்சி தொல்லைகள் வர வாய்ப்புண்டு.

முதுமையில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைய காரணங்கள்

  • உடலில் ஏற்படும் பல நோய்களினாலும் நோய் எதிர்ப்புச் சக்தி குறையலாம். உதாரணம்: நிரிழிவு நோய், புற்று நோய், இதய நோய், சிறுநீரகம் செயலிழப்பு போன்ற நோய்கள்.

  • நோய்களுக்கு எடுத்துக் கொள்ளம் சிகிச்சை முறையினாலும் எதிர்ப்பு சக்தி குறையலாம். உதாரணம்: ஸ்டீராய்டு சிகிச்சை, புற்று நோய்க்கு கொடுக்கும் சிகிச்சை முறைகள்.

  • சத்துணவு குறைவினாலும் நோய்எதிர்ப்புச் சக்திகுறையலாம்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க : நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, பாதாம், கொட்டை வகைகள், பாகற்காய், தேன் காளான், பூண்டு, இஞ்சி, மிளகு மஞ்சள், தயிர் போன்ற உணவு வகைகளை முடிந்த அளவு அதிகம் சாப்பிட வேண்டும்.

தினமும் செய்யும் உடற்பயிற்சி, தவறாமல் கடைபிடிக்கும் தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி அவசியம்.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க தினமும் காலையில் 30 நிமிடம், மாலையில் 30 நிமிடம் உடலில் வெயில் படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் டி அதிகமுள்ள மீன், மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, கல் ஈரல், பால், சோயா பால் மற்றும் வெண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முதுமையில் காணும் தொற்று நோய்கள்

  • நெஞ்சக நோய்கள், ப்ளூ, நிமோனியா, காசநோய்

  • சிறுநீர் தாரை நோய்கள் : ஆண்களுக்கு பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினாலும், பெண்களுக்கு இறுதி மாதவிடாய் சமயத்தில் பிறப்புறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களினாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர்ப்பை சரிவர சுருங்கி விரிவடையாத காரணத்தினாலும் மற்றும் சிறுநீர் தாரையில் சிறு குழாயை (Catheter) தொடர்ந்து வைத்திருப்பதினாலும் பூச்சித் தொல்லைகள் ஏற்படும்.

  • வயிறு, குடல் சார்ந்த பூச்சித் தொல்லைகள். உதாரணம்: டைபாய்டு, சீதபேதி, வயிற்றுப்போக்கு, பித்தப்பையில் பூச்சித் தொல்லை மற்றும் கெட்டுப்போன உணவு (Food poisoning).

  • தோல் சார்ந்த தொற்று நோய்கள் -நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு படை மற்றும் சிறுசிறு கொப்பளங்கள் வர வாய்ப்பு அதிகமுண்டு, அக்கி சார்ந்த அம்மை நோய்கள்

  • மூளை, எலும்பு மற்றும் இருதய வால்வுகளிலும் தொற்றுநோய்கள் வரலாம்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முதியவர்

தொற்றுநோய்களை வராமல் தடுக்க

  • முடிந்தளவிற்கு பனி மற்றும் மழை காலங்களில் வெந்நீரை அருந்த வேண்டும்.

  • ஒருவர் இரும்பும் பொழுது நோய்க்கிருமிகள் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. ஆகையால் முதியவர்கள் கூட்டம், நெரிசல் அதிகமுள்ள இடங்களை தவிர்க்க வேண்டும்.

  • முடிந்தளவிற்கு வெளியே உணவு உண்ணுவதை தவிர்க்க வேண்டும். ஜஸ் கிரீம் மற்றும் குளிர்பானங்களில் நுண்ணுயிர் கிருமிகளின் வளர்ச்சி அதிகம் உள்ளது. கூடியவரை அவற்றைத் தவிர்க்கவும்.

  • உடல் சுகாதாரம் மிகவும் அவசியம். தினமும் இரண்டு முறை குளித்து உடை மாற்றுவது நல்லது.

  • முடிந்தளவிற்கு தண்ணீர் அதிகம் அருந்தி சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டும்.

  • பிறப்புறுப்புகளின் சுத்தம் மிகவும் அவசியம்.

  • தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி

நோய் தடுப்பு என்றாலே குழந்தைகளுக்கு மட்டும் தான் என்ற காலம் போய் முதியவர்களுக்கும் உண்டு என்ற நிலை தற்பொழுது வந்துள்ளது.

ப்ளூ, நிமோனியா, டெட்டனஸ், ஹெப்படைட்டிஸ் பி மற்றும் அம்மை சார்ந்த அக்கி போன்ற நோய்கள் வராமல் தடுக்க முதியவர்கள் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது நல்லது.

நிமோனியா

முதியோர்களுக்கு வரும் இருமல், சளித் தொல்லைகளில் நிமோனியா முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒரு பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று நோய். இந்நோய் உள்ளவர்கள் இரும்பும் பொழுது காற்றின் மூலம் மற்றவர்களுக்கு பரவும். இந்நோயின் முதல் அறிகுறி காய்ச்சல், உடல்வலி மற்றும் வாந்தி. இதைத் தொடர்ந்து இருமல், சளி, மூச்சு திணறுதல் போன்றவை தோன்றும். இருமல் அதிகரிக்கும் பொழுது சிலருக்கு சளியில் இரத்தமும் கலந்திருக்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்நோய் காது, தலை (ஸ்சைனஸ்) மற்றும் மூளையை பாதித்து உயிருக்கே ஆபத்தைக்கூட விளைவிக்கும். மிகவும் வயதானவர்களுக்கு இந்நோய் மனக்குழப்பம், கீழே விழுதல் மற்றும் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை கூட ஏற்படலாம்.

நிமோனியா வர வாய்ப்பு உள்ளவர்கள்

  • மிகவும் வயதானவர்கள்

  • நீரிழிவு நோய்

  • இருதய நோய்

  • சிறுநீரக நோய்

  • தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள்

  • அதிகமாக மது அருந்துபவர்கள்

  • ஸ்டீராய்டு மருந்தை தொடர்ந்து உண்பவர்கள்

  • சமீபத்தில் ப்ளூ ஜீரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்

  • ஆஸ்த்துமா, நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்

  • தூசி நிறைந்த இருப்பிடம்

  • புற்று நோய்

  • மாற்று உறுப்பு பெற்று இருப்பவர்கள்

  • எய்ட்ஸ் நோய்

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முதியவர்

முதுமையில் நோயின் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு இந்நோய் மரணத்தைக் கூட விளைவிக்கும். ஆகையால் இந்நோய் வராமல் தடுப்பதே நல்லது. இதற்கும் தடுப்பூசி உண்டு. சுமார் 50 வயதைக் கடந்தவர்களுக்கு ஆயுளுக்கு ஒரே ஒரு முறை இந்த

ஊசியைஎடுத்துக்கொண்டால்போதும். ஒருசிலருக்கு, முக்கியமாகஇணைநோய்உள்ளவர்களுக்குமட்டும்ஒருஆண்டுகழித்துஇரண்டாவதுதடுப்பூசியைசெலுத்திக்கொள்ளலாம்இந்ததடுப்பூசியினால்பக்கவிளைவுகள்ஏதும்இல்லை. தேவைப்பட்டார்களுக்குஇன்புளூயன்ஸாதடுப்பூசியையும்ஒரேசமயத்தில்போட்டுக்கொள்ளலாம்.

நிமோனியா தடுப்பூசியின் பயன்கள்

  • நிமோனியா சளி ஜீரம் வராமல் தடுக்கிறது.

  • அடிக்கடி மருத்துவமனையில் இந்நோய்க்காக சிகிச்சை பெற்று பணம் விரயம் ஆவது தடுக்கப்படுகிறது.

  • தடுப்பூசி மூலம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, இவர்கள் மூலம் இந்நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

ப்ளூ (இன்புளூயன்ஸா)

இது வைரஸ் கிருமியினால் ஏற்படும் ஒரு நோய். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இருமலிலிருந்து அல்லது தும்மலிலிருந்து இக்கிருமி மற்றவர்களுக்கு எளிதாக பரவி வருகிறது. இந்நோய் முக்கியமாக குளிர் காலத்தில் தான் தாக்கும். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், குளிர், உடல்வலி, சோர்வு, தலைவலி, பசி குறைவு, தொண்டையில் ஒரு வித வலி மற்றும் சளி அதிகம் இல்லாத இருமல் உண்டாகும். சுமார் 70 வயதைக் கடந்தவர்களுக்கு இந்நோயுடன் நிமோனியா போன்ற சளித் தொல்லையும் கூடவே வர வாய்ப்புண்டு. இந்த புளூ காய்ச்சல் சுமார் 7 10 நாட்களில் சரியாகிவிடும். உயிருக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாது.

ப்ளூ (இன்புளூயன்ஸா) வராமல் தடுப்பதற்கு, தடுப்பூசி உண்டு. வருடத்திற்கு ஒரு முறை போட்டுக் கொள்வது நல்லது. இந்த ஊசியினால் பக்க விளைவுகள் ஏதுவும் வராது. இந்த ஊசியை ஆஸ்துமா, புகைப் பிடிப்பவர்கள், நீரிழிவு நோய், இருதய நோய், புற்று நோய் மற்றும் சிறுநீரக தொல்லை உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறை போட்டுக் கொள்வது மிகவும் நல்லது.

Representational Image

கோவிட் தடுப்பூசியானது மூன்று டோஸ்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கக்குவான் இருமல் அதாவது பெர்டுசிஸ் நோய் வராமல் இருப்பதற்கு தடுப்பூசி உள்ளது. இதை ஒரு டோஸ் எடுத்துக் கொண்டால் இந்த பெர்குசிஸ் என்கிற பாக்டீரியா நோய் தொற்று ஏற்படாது.

மேற்கண்ட தடுப்பூசிகள் எல்லாமே நுரையீரல் நோய் தொற்று ஏற்பட்டு நிமோனியா வராமல் பாதுகாக்கக்கூடிய மிக முக்கியமான தடுப்பு முறைகளில் ஒன்றாகும்.

அக்கி என்பது ஒரு அம்மை நோயாகும் (Shingles). இந்நோய் வராமல் தடுக்கவும் தடுப்பூசி உண்டு. இதை ஆயுளுக்கு ஒருமுறை போட்டாலே போதும்.

டெட்டனஸ்

வயதான காலத்தில் அடிக்கடி கீழே விழ உடம்பில் காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆகையால் இவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடுப்பு ஊசியை போட்டுக் கொள்வது நல்லது.

ஹெப்படைட்டிஸ் பி

வயதானவர்கள் எல்லோருக்கும் ஹெப்படைட்டிஸ் பி பரிந்துரைக்கப்படுவதில்லை. அடிக்கடி இரத்தம் செலுத்தி கொள்பவர்கள், குளுக்கோஸ் சார்ந்த திரவ ஊசி போட்டு கொள்பவர்கள் மற்றும் நரம்பு ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு இந்த ஊசி தேவைப்படும். மூன்று ஊசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். முதல் ஊசி போட்டு கொண்ட பிறகு அடுத்ததாக ஒரு மாதம் கழித்து இரண்டாவது ஊசி, மூன்றாவது ஊசியை ஆறு மாதம் கழித்து போட்டுக் கொள்ளவேண்டும்.

நோய் வந்த பின்பு சிகிச்சை செய்து பணம் மற்றும் கால விரயத்தை தவிர்த்திட அந்நோயை வராமலே தடுப்பது சாலச் சிறந்ததாகும். அதற்கு இன்றே நாம் முயற்சிப்போம்.

ஒவ்வொரு தடுப்பூசியும் ஒரு சிறிய வெற்றியே !

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.