2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை| Dinamalar

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு – காஷ்மீரின் குல்காம் மாவட்டம், செயான் தேவ்சர் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். இரு தரப்புக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் லஷ்கர் – இ – தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர். மற்றொருவர், பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் என தெரிய வந்தது. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.