Tamil Nadu News Updates: வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும். வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் செவ்வாய்கிழமை புயல் மையம் கொள்ளும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு தடுப்பூசி
தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாமின் மூலம் நேற்று ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
பெட்ரோல், விலை நிலவரம்
சென்னையில் தொடர்ந்து 33வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.85-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ100.94-க்கும் விற்பனையாகிறது.
வீடுகளை இடிக்க எதிர்ப்பு – தீக்குளித்தவர் உயிரிழப்பு
சென்னை ஆர் ஏ புரம் கோவிந்தசாமி நகரில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த கண்ணையன் உயிரிழப்பு. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த கூலித் தொழிலாளி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சென்னை அணி வெற்றி
ஐபிஎல் : டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி. முதலில் ஆடிய சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் சேர்ப்பு. தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 17.4 ஓவர்களில் 117 ரன்களை மட்டும் எடுத்து ஆல் அவுட்
தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மீண்டும் வெளிநாடு பயணம். ஜூன் இறுதியில் லண்டன், ஜூலையில் அமெரிக்கா செல்கிறார்.
முல்லை பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை 5 பேர் கொண்ட்ட கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு செய்ய உள்ளனர் அணையில் கோடை காலத்தில் செய்யப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது
தமிழக சட்டப்பேரவையில் இன்றும், நாளையும் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் . காவல், தீயணைப்பு, உள்துறை குறித்த கேள்விகளுக்கு பதிலுரை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்