அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த குடும்பத்தாருடன் எங்கே தங்கியுள்ளார்? கசிந்த முக்கிய தகவல்



மகிந்த ராஜபக்சா தனது குடும்பத்துடன் திருகோணமலை கடற்படை தளத்தை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை முழுவதும் கொந்தளிப்பாக காணப்படும் சூழலில், பிரதமருக்கான அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சா வெளியேறினார். பலத்த பாதுகாப்புடன் குடும்பத்தினருடன் சொகுசு வீட்டை விட்டு அவர் வெளியேறினார்.

இந்நிலையில் மகிந்த ராஜபக்சா, அவரது மனைவி, ஒரு மகன் மற்றும் குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை திருகோணமலை கடற்படைத் தளத்தை வந்தடைந்தனர்.

அவர்கள் கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.