ஆந்திராவில் இளம்பெண் கற்பழித்து கொலை

திருப்பதி:
ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் கணக்கான பள்ளி மண்டலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 7 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு வீட்டில் இருந்து உடல் உபாதை கழிப்பதற்காக ஊருக்கு வெளிப்புறமாக சென்றுள்ளார். வீட்டிலிருந்து வெளியே சென்ற இளம்பெண் காலை 10 மணி வரை வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கிணற்றின் அருகே தலையில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே பெரிய அளவில் ரத்தம் படிந்த கல் ஒன்று இருந்தது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் 4 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.