இந்தாண்டிற்கான புலிட்சர் விருதுக்கு 4 இந்தியர்கள் தேர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்; இந்தாண்டிற்கான புலிட்சர் விருதுக்கு நான்கு இந்தியர்கள் தேர்வாகியுள்ளனர். உலக அளவில் இலக்கியம், பத்திரிகை, ஆன்லைன் ஜர்னலிசம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அமெரிக்காவில் புலிட்சர் எனப்படும் உயரிய விருது வழங்கப்படுகிறது.

latest tamil news

இந்தாண்டிற்கான புலிட்சர் விருதுக்கு நான்கு இந்தியர்கள் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களில் கடந்தாண்டு ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்க சென்ற இடத்தில் தலிபான்கள் கொடூர தாக்குதலில் பலியான இந்தியாவைச் சேர்ந்த டேனிஷ் சித்திக், மற்றும் புகைப்பட கலைஞரான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண் புகைப்படக்காரரான சன்னா இர்ஷாத் மாட்டூ, அமித் தேவ், ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.

இதில் மறைந்த டேனிஷ் சித்திக் இரண்டாவது முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.