இலங்கையில் கொல்லப்பட்டவர்களின் ஆன்மா நிம்மதியா வாழ விடாது! வைரலாகும் ரஜினிகாந்த் வீடியோ



இலங்கை போர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய பழைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவி விலகாததால் கொழும்பில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், இலங்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் நடந்தபோது, தமிழகத்தில் நடிகர் சங்கம் சார்பில் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

அதில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, ‘இலங்கை மட்டுமல்ல, எந்த நாடாக இருந்தாலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏழை மக்கள் வேதனைபட்டால் அந்த நாடு உருப்படாது.

இலங்கையில் பெண்களின் உதிரம் கொட்டுகிறது. அங்கு சாகும் மக்களின் பிணங்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்படுகிறது. நீங்கள் யுத்தத்தில் எல்லாரையும் அழித்தாலும், அந்த விதை நாளை வந்து உங்களை நிம்மதியாக வாழ விடாது’ என ஆவேசமாக பேசினார்.

இந்த வீடியோவை ரஜினிகாந்தின் ரசிகர்கள், தமிழ் தேசியவாதிகள், நெட்டிசன்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.