இலங்கையில் நீடிக்கும் வன்முறை – ஐநா கடும் கண்டனம்!

இலங்கை வன்முறை சம்பவத்திற்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அண்டை நாடான இலங்கையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் இலங்கையில், கொரோனா தொற்று காரணமாக பிறக்கப்பிட்ட முழு ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. சமையல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் – டீசல், அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. இதனால் அந்நாட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர்.

பல மாதங்களாக நீடித்து வரும் இந்த பொருளாதார நெருக்கடி, இலங்கையின் அரசியலிலும் எதிரொலித்தது. இந்த இடர்பாட்டில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியாத அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதற்கிடையே, பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக,
மகிந்த ராஜபக்சே
அறிவித்தார்.

இதை அடுத்து குருங்கலாவில் உள்ள மகிந்த ராஜபக்சே வீட்டின் மீது போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். இதைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. க்ஷ

BREAKING: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா!

இந்நிலையில், இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவத்திற்கு ஐ.நா. மனித உாிமைகள் ஆணையத்தின் தலைவா் மிச்செல் பச்லெட் கண்டனம் தொிவித்துள்ளாா். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

மே 9 அன்று கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இலங்கையில் வன்முறை அதிகரித்து வருவதையும், அதைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான வன்முறையையும் கண்டு மிகவும் கவலை அடைந்துள்ளேன்.

எல்லா வன்முறைகளையும் நான் கண்டிக்கிறேன் மற்றும் நடந்த அனைத்து தாக்குதல்களையும் சுதந்திரமாகவும் முழுமையாகவும் வெளிப்படையாகவும் விசாரிக்க அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன். வன்முறையைத் தூண்டுபவர்கள் அல்லது ஒழுங்கமைப்பவர்கள் உட்பட, பொறுப்பானவர்கள் கணக்குக் காட்டப்படுவதை உறுதி செய்வது முக்கியம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.