இலங்கையில் பொது சொத்துக்களை சூறையாடுவோரை கண்டதும் சுட உத்தரவு

இலங்கையில் பொது சொத்துக்களை சூறையாடுவோரை கண்டதும் சுட அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அந்நாட்டில் அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களுக்கு போரட்டக்காரர்கள் தீ வைத்ததுடன், அவர்களின் சொத்துக்களையும் சேதப்படுத்தினர்.

இந்நிலையில், இன்றும் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து, சக குடிமக்களை தாக்குவோரையும் சுட்டுத்தள்ள முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, காலே மாவட்டத்தில் உள்ள ரத்காமாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயமடைந்தனர்.

மேலும், நீர்கொழும்புவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.