ஈகுவடாரில் சிறைக் கைதிகளிடையே கலவரம், கத்திக்குத்து – 43 பேர் பலி

தென் அமெரிக்க நடான ஈகுவடாரில் சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட கலவரம், கத்திக் குத்து சம்பவத்தில் 43 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

போதைக் கடத்தல் கும்பலின் தலைவன் சிறைக்கு மாற்றப்பட்டதை அடுத்து இரு கும்பலிடையே சண்டை ஏற்பட்டது. கைதிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டதில் 43 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 200-க்கும் மேற்பட்டோர் சிறையை உடைத்து தப்பினர். 112 கைதிகளை போலீசார் பிடித்த நிலையில் தலைமறைவான நூற்றுக்கும் மேற்பட்டோரை ஹெலிகாப்டர் உதவியுடன் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.