எலான் மஸ்க் டுவீட்டால் பரபரப்பு| Dinamalar

வாஷிங்டன் : ‘ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்து விட்டால்…’ என, உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், நேற்று சமூக வலைதளத்தில், ‘ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்து விட்டால்…’ என பதிவிட்டு இருந்தார். இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனுக்கு எலான் மஸ்க் உதவி செய்து வருகிறார். இதையடுத்து ‘ரஷ்யா அவருக்கு மிரட்டல் விடுத்திருக்கலாம். அதனால்தான் இப்படி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்’ என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.