கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி! இருவர் கைது.!

சென்னை அருகே கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த பெண். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சித்ரா என்பவர் அதே பகுதியில் வசிக்கும் ரங்கநாயகி என்பவரிடம் 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். பணத்தை திருப்பி செலுத்தாததால் வட்டி அதிகமாகி 30 லட்சமாக உயர்ந்து விட்டதாக தெரிவித்த ரங்கநாயகி, வீட்டை எழுதி தருமாறு இரண்டு பேருடன் வந்து சித்ராவை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இவர்கள் மிரட்டியதால் பயந்துபோன சித்ரா மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளித்து உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த சித்தரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சித்ராவிடம் விசாரணை செய்ததில், ரங்கநாயகி அவரது கணவர், மகன் உள்ளிட்டோர் கூட்டமாக வந்து வீட்டை எழுதி தருமாறு மிரட்டியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து ரங்கநாயகி மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.