கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய தம்பதிக்கு வலை| Dinamalar

சிறுபாக்கம் : சிறுபாக்கம் அருகே இளம் பெண்ணிற்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர்.சுகாதார துறை மாவட்ட இணை இயக்குனர் ரமேஷ்பாபு தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று வேப்பூர் பகுதிகளிலுள்ள மருந்தகங்களில் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, சிறுபாக்கம் அடுத்த மங்களூரில் வீட்டில் வைத்து இளம் பெண்ணிற்கு கருக்கலைப்பு பணி நடப்பதாக தகவல் வந்தது.இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவக் குழுவினர் விசாரணையில் ஈடுபட்டனர். அதில், மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த குமார், 48 என்பதும், அவரது வீட்டின் முதல் தளத்திலுள்ள அறையில் 22 வயது மதிக்கத்தக்க பெண்ணிற்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கி உட்கார வைத்துள்ளதும் தெரிய வந்தது.

உடன் இளம் பெண்ணை மீட்ட மருத்துவக்குழுவினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து புகாரில் சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, குமார் மற்றும் அவரது மனைவி சித்ராவை தேடி வருகின்றனர்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.