கல்லூரியில் புகுந்து ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடியவர் கைது| Dinamalar

காரைக்கால் : காரைக்காலில் தனியார் கல்லுாரியில் புகுந்து ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.காரைக்கால் மண்டபத்துார் பகுதியில் உள்ள பாரதியார் பொறியியல் கல்லுாரி, விடுமுறை என்பதால் மூடப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் கல்லுாரியின் மெக்கானிக்கல் துறையில் இருந்த ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை மூவர் திருட முயன்றனர்.

அவர்களை கல்லூரி ஊழியர்கள் பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் பிடிபட்டார்.அவரை கோட்டுச்சேரி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், சிதம்பரம் பகுதியை சேர்ந்த ராம்கி(32) என்பதும், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்து, வீடு திரும்பும் போது திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருடப்பட்ட ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பிச் சென்ற இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.