சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொழிலதிபர் கைது| Dinamalar

புதுடில்லி : போலி ரசீதுகள் வாயிலாக வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக 1,146 கோடி ரூபாய் அனுப்பிய குற்றச்சாட்டில், தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டில்லியைச் சேர்ந்த, ‘சீபே இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் பங்குதாரர், தீபக் நய்யார். இவர், சீன நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்று, போலி நிறுவனங்கள் வாயிலாக வெளிநாடுகளுக்கு 1,146 கோடி ரூபாய் அனுப்பியுள்ளதை, அமலாக்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துஉள்ளனர். முன்னணி நிறுவனங்களின் விமான சேவை ரசீதுகளில் தில்லுமுல்லு செய்திருப்பதையும், மென்பொருள் சேவை பெற்றதாக கூறி போலி ரசீதுகள் தயாரித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, நேற்று தீபக் நய்யாரை அமலாக்கத் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக பட்டயக் கணக்காளர் ரவிகுமார் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.