சர்ச்சைக்குரிய கேள்விக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு| Dinamalar

புதுடில்லி : வினாத்தாளில், ஹிந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க, சாரதா பல்கலைக்கு, பல்கலை மானிய குழு அறிவுறுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள சாரதா பல்கலையில் நடந்த தேர்வில், ஹிந்துத்துவா மற்றும் பாசிசத்திற்கு இடையில் உள்ள ஒற்றுமைகள் குறித்து விளக்குமாறு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வித்தாளின் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க, சாரதா பல்கலைக்கு, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானிய குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.