சாப்ட்வேர் ஊழியரை தாக்கி லேப்டாப், மொபைல்போன் பறிப்பு

புதுச்சேரி : ஓட்டலில் தங்கியிருந்த தனியார் சாப்ட்வேர் நிறுவன ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கி லேப்டாப், மொபைல் போனை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், ஹரித்துவார்மங்களத்தை சேர்ந்தவர் கண்ணையன், 35; புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிகிறார்.

இவர், புதுச்சேரி, காமராஜ் சாலையில் தனியார் ஓட்டலில் தங்கி உள்ளார். கடந்த 8ம் தேதி, அவர் தங்கியிருந்த ஓட்டல் அறை கதவை மர்ம நபர்கள் தட்டினர்.கண்ணையன் கதவை திறந்ததும் மர்ம நபர்கள் நான்கு பேர் திடீரென பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கினர். இதனை அவர் தட்டிக் கேட்டதால் மீண்டும் தாக்கினர்.அறைக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், கண்ணையன் வைத்திருந்த லேப் டாப், மொபைல் போன், மணிபர்சை திருடிச் சென்றனர்.புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.