திருச்சூர் பூரம் விழா கோலாகலம் :யானை அணிவகுப்புடன் வண்ண குடை மாற்றம்| Dinamalar

திருச்சூர்,:கேரள மாநிலம் திருச்சூரில் யானைகள் அணிவகுப்பு மற்றும் வண்ண குடை மாற்றம் நிகழ்ச்சியுடன் பூரம் விழாநேற்று கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழா நேற்று முன் தினம் துவங்கியது. காலையில் கணிமங்கலம் சாஸ்தா எழுந்தருளி, ஓன்பது யானைகளின் அணிவகுப்புடன், வடக்குநாதரான சிவபெருமானை வணங்கும் நிகழ்வு நடந்தது.
தொடர்ந்து, பாரமேக்காவு பகவதி அம்மன் பஞ்சவாத்தியம் முழங்க, 15 யானைகளின் அணிவகுப்புடன் எழுந்தருளி வடக்குநாதர் சன்னதிக்கு வந்தார். இதன்பின், ‘இலஞ்சித்தரை மேளம்’ இசைக்கப்பட்டது.

மாலையில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் அணிவகுப்பு நடந்தது. பாரமேக்காவு மற்றும் திருவம்பாடி தரப்பினர் போட்டிபோட்டு நடத்திய, யானை அணிவகுப்பு மற்றும் குடைமாற்றம் நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து மகிழ்ந்தனர். இரவில் வாண வேடிக்கை நடந்தது. இன்று பூரம் விழா நிறைவடைகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.