ரயிலில் அடிபட்டு இளைஞர் சடலமாக மீட்பு: பல கோணங்களில் போலீசார் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத இளைஞர், ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் தஞ்சாவூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையல் அதிகாலை 2.40 மணிக்கு ரயில் பரமக்குடியை கடந்தபோது தண்டவாளத்தில் ஒரு இளைஞர் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
image
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்த்தபோது இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போலீசார், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து இளைஞர் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா அல்லது ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.