லாரியில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்து சேதம்| Dinamalar

புதுச்சத்திரம் : லாரியில் ஏற்றி வந்த வைக்கோல் மின்கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்து சேதமானது.பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் செல்வம், 45; இவர், புதுச்சத்திரம் அடுத்த காயல்பட்டு பகுதியில் நேற்று மாலை வைக்கோல் விலைக்கு வாங்கி டி.என்.31.சி.வி. 1027 பதிவெண் கொண்ட லாரியில் ஏற்றி வீடு திரும்பினார்.

பெரியப்பட்டு அருகே வந்த போது, சாலை குறுக்கே சென்ற மின் கம்பியில் வைக்கோல் உரசி தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வம், சிறப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் வைக்கோல் எரிந்து சேதமானது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.