“விரைவில் அஸ்ஸாம் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்படும்!" – அமித் ஷா நம்பிக்கை

வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் வன்முறைகளைத் தடுக்கும் விதமாக, ஏ.எப்.எஸ்.பி.ஏ எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ளது. திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் ஏ.எப்.எஸ்.பி.ஏ நீக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் 23 மாவட்டங்களில் மட்டும் ஏ.எப்.எஸ்.பி.ஏ நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டம் அமலில் உள்ள மாநிலங்களில், குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள், சந்தேகிக்கப்படும் வகையில் உள்ளவர்கள் போன்றவர்களை வாரன்ட் ஏதுமின்றி விசாரணை நடத்தவும், சுட்டுத்தள்ளுவதற்கும் கூட ராணுவத்துக்கு அதிகாரம் உள்ளது. இந்த நிலையில், விரைவில் அஸ்ஸாம் முழுவதிலும் ஏ.எப்.எஸ்.பி.ஏ நீக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

பாஜக -மோடி, அமித் ஷா

அஸ்ஸாமில் பேசிய அமித் ஷா, “1990 முதல் இந்த சட்டம் அமலில் உள்ளது. இடையில் 7 முறை இந்த சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், மோடியின் இந்த 8 ஆண்டுகால ஆட்சியில், சட்டம், ஒழுங்கு நிலை காரணமாக அஸ்ஸாமில் 23 மாவட்டங்களில் இச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது. விரைவில் மாநிலம் முழுவதுமே ஏ.எப்.எஸ்.பி.ஏ நீக்கப்படும் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

முன்னதாக இரண்டு வாரங்களுக்கு அஸ்ஸாம் வந்திருந்த பிரதமர் மோடி, அஸ்ஸாமைத் தொடர்ந்து நாகாலாந்து, மணிப்பூரிலும் ஏ.எப்.எஸ்.பி.ஏ-வை நீக்க மத்திய அரசு செயல்படுகிறது எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.