இந்தியாவுக்கு தப்பினாரா ராஜபக்சே:இந்திய தூதரகம் மறுப்பு| Dinamalar

கொழும்பு :இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியாவுக்கு தப்பி சென்றதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என, இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே நேற்று முன் தினம் ராஜினாமா செய்த பின் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார்.

அவர் குடும்பத்துடன் இந்தியா தப்பி சென்றுவிட்டதாக சமூகவலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது. ‘இது முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது. இதை நம்ப வேண்டாம்’ என, இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.