இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவுக்கு தப்பவில்லை: தூதரகம் மறுப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு: ‘இலங்கை அரசியல்வாதிகளும், அவர்களது குடும்பங்களும் இந்தியாவுக்கு தப்பி சென்றதாக வதந்திகள் பரவுவதாக’, இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே நேற்று முன்தினம் ராஜினாமா செய்த பின் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார். அவர் குடும்பத்துடன் இந்தியா தப்பி சென்றுவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது.

latest tamil news

இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‛குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதனை இந்திய தூதரகம் மறுக்கிறது. இவை போலியானதும் அப்பட்டமான பொய்யானதுமான அறிக்கைகளாக உள்ளதுடன் எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவை. இவ்வாறான செய்திகளை தூதரகம் கடுமையாக மறுக்கின்றது’ எனத் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.