ஊர் கொந்தளிக்க… நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே? டுவிட்டர் பதிவிட்ட கவிஞர் வைரமுத்து



ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே? என்று கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் முன்வைத்துள்ளார்.

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழல் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்த போதிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சா ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும் ராஜபக்ச ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி, தற்போது இலங்கை பற்றி எரிந்து வருகிறது.

இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சுழ்நிலை குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
நான்கு பக்கம் மரணம் சூழ்ந்தபோதும் ‘தாயகம் பிரியேன் தாய்மண்ணில் மரிப்பேன்’ என்ற பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே…

ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே…

ஓ சர்வதேச சமூகமே! இப்போதேனும் தமிழன் வீரத்திற்குத் தலைவணங்கு என்று பதிவிட்டுள்ளார்.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.