என் மீது ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சரி… கெஜ்ரிவாலுக்கு பாஜக தலைவர் சவால்

புதுடெல்லி:
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தது குறித்து அவரிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்புவேன் என்று பாஜக தலைவர்  தஜிந்தர் பால் சிங் பக்கா கூறியுள்ளார். 
தலைநகரான டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. மேலும், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலும்  பஞ்சாபில் பக்வந்த் சிங் மானும் முதல்வராக உள்ளனர்.
இந்நிலையில்,  ‘எனக்கு எதிராக ஒன்றல்ல, ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்புவேன்’ என்று பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா கூறியுள்ளார். 
மேலும், பஞ்சாபில் குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மற்றும் மாநிலத்தில் போதைப்பொருள் மாஃபியா, காலிஸ்தான் பிரிவினைவாதிகளை கட்டுப்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பியதற்காக பஞ்சாப் போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.