கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தை, இன்று பிற்பகல் 3 மணிக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜூம் Zoom  தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இந்த கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தை நடத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கூட்டம் இரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னதாக தெரிவித்திருந்தார். எனினும் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜூம் Zoom தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.