குழந்தை பெற்று தரக் கோரி மகன் மீது பெற்றோர் வழக்கு| Dinamalar

புதுடில்லி:உத்தரகண்ட், ஹரித்துவாரைச் சேர்ந்த பிரசாத் தம்பதி, மகன் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
இது குறித்து பிரசாத் கூறியதாவது:என் மகனுக்கு, 2016ல் ஜாதி, மதம், பாலினம் பார்க்காமல் திருமணம் செய்து வைத்தேன். என் சொத்தை விற்று, மகனை அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்க வைத்தேன். தற்போது வங்கியில் கடன் வாங்கி சொந்த வீட்டில் வசிக்கிறேன்.
ஆறு ஆண்டுகளாகியும் என் மகனும், மருமகளும் பிள்ளை பெற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஓராண்டிற்குள் குழந்தை பெற வேண்டும். நாங்கள் பேரக் குழந்தையை கொஞ்சி மகிழ வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் எங்களுக்கு 5 கோடி ரூபாய் தர வேண்டும். இது தொடர்பாக மகன் மீது வழக்கு தொடுத்துள்ளேன் என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.