கோவை : ரசாயனம் மூலம் பழுக்க பழுக்கவைக்கப்பட்ட 12 டன் மாம்பழங்கள் அழிப்பு

கோவையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 12 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை பெரிய கடை வீதி, வைசியால் வீதி, கருப்பன்ன கவுண்டர் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 6 குழுக்களாக பிரிந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 42 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்  ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 12 டன் மாம்பழம் மற்றும் 2 டன் சாத்துக்குடியை பறிமுதல் செய்த அதிகாரிகள் குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.