சந்தூர் இசைக் கலைஞர் ஷிவ்குமார் ஷர்மா காலமானார்| Dinamalar

மும்பை: ‘சந்துார்’ இசைக் கலைஞர் ஷிவ்குமார் ஷர்மா, 84, மாரடைப்பால் காலமானார்.
ஜம்மு – காஷ்மீரின் பாரம்பரிய இசைக்கருவியான சந்துாரை முதலில் இசைத்தவர் என்ற பெருமையை பெற்றவர் ‘மேஸ்ட்ரோ’ ஷிவ்குமார் ஷர்மா. மத்திய அரசின் உயரிய விருதான ‘பத்ம விபூஷண்’ பெற்றவர். மும்பையில் வசித்து வந்த ஷர்மா, திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜம்முவில், 1938ல் பிறந்த ஷர்மா, பிரபல புல்லாங்குழல் கலைஞர் பண்டிட் ஹரிபிரசாத் சவுராசியாவுடன் இணைந்து, பல சினிமா படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது மகன் ராகுல் ஷர்மாவும் சந்துார் இசைக்கலைஞர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.