மும்பை: ‘சந்துார்’ இசைக் கலைஞர் ஷிவ்குமார் ஷர்மா, 84, மாரடைப்பால் காலமானார். ஜம்மு – காஷ்மீரின் பாரம்பரிய இசைக்கருவியான சந்துாரை முதலில் இசைத்தவர் என்ற பெருமையை பெற்றவர் ‘மேஸ்ட்ரோ’ ஷிவ்குமார் ஷர்மா. மத்திய அரசின் உயரிய விருதான ‘பத்ம விபூஷண்’ பெற்றவர். மும்பையில் வசித்து வந்த ஷர்மா, திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜம்முவில், 1938ல் பிறந்த ஷர்மா, பிரபல புல்லாங்குழல் கலைஞர் பண்டிட் ஹரிபிரசாத் சவுராசியாவுடன் இணைந்து, பல சினிமா படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது மகன் ராகுல் ஷர்மாவும் சந்துார் இசைக்கலைஞர்.
மும்பை: ‘சந்துார்’ இசைக் கலைஞர் ஷிவ்குமார் ஷர்மா, 84, மாரடைப்பால் காலமானார்.ஜம்மு – காஷ்மீரின் பாரம்பரிய இசைக்கருவியான சந்துாரை முதலில் இசைத்தவர் என்ற பெருமையை பெற்றவர் ‘மேஸ்ட்ரோ’
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.