சிங்கப்பூரில் இந்திய வம்சாவளிக்கு சிறை| Dinamalar

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் லஞ்சம் தர முயன்ற இந்திய வம்சாவளிக்கு நான்கு வாரங்கள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது.இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான கிருஷ்ணா ராவ் நரசிம்ம நாயுடு, குடி போதையில் கார் ஓட்டி விபத்தில் சிக்கியுள்ளார்.
போலீஸ் விசாரணையின்போது குற்றத்தை மறைக்க, 3,000 ரூபாய் லஞ்சம் தர முயன்றுள்ளார். இதை ஏற்க மறுத்த போலீஸ் அதிகாரி, குடி போதையில் கார் ஓட்டியது; லஞ்சம் தர முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் உயர் நீதிமன்றம், கிருஷ்ணா ராவுக்கு நான்கு வாரங்கள்சிறைத் தண்டனையும், 2.80 லட்சம் ரூபாய்அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.