சென்னையில் திருடப்பட்ட மற்றும் மாயமான 126 செல்போன்களை மீட்ட சைபர் கிரைம் போலீசார்.!

சென்னை அண்ணாநகர் காவல் வரையறைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து காணாமல் போன மற்றும் திருடப்பட்ட 126 செல்போன்களை IMEI குறியீட்டு எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

அண்ணா நகருக்கு உட்பட்ட 12 காவல் நிலையங்களில் பதிவான செல்போன் திருட்டு வழக்குகளை விசாரித்த போலீசார், கள்ளச் சந்தை மூலமாக  தமிழகம், கேரளா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்த செல்போன்கள் விற்கப்பட்டுள்ளதை அவற்றின் IMEI குறியீட்டு எண்ணை வைத்து அவற்றின் தற்போதைய சிம் கார்ட் பயன்பாட்டாளர்களை தொடர்பு கொண்டு கண்டறிந்தனர்.

அவை திருடப்பட்ட செல்போன்கள் என அறியாத அவர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.