சேலம்: கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

சேலம் அருகே பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை பிறந்தது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்டர். கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
image
அப்போது பிரசவ வலி அதிகமானதால் ஓட்டுனர் சுரேஷ் வாகனத்தை முத்தம்பட்டி பகுதியில் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினார். இதனையடுத்து மருந்துவ உதவியாளர். சௌந்தர்யா ஈஸ்டருக்கு பிரசவம் பார்த்தார். இதில், ஈஸ்டருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.