#திருவாரூர்_சிவகங்கை || சிறுமியை கடத்தி சென்று 9 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் கைது.!

புதுச்சேரி || திருவாரூர் அருகே நடப்பூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (25 வயது)  என்ற வாலிபரிடம் இருந்து, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர்.

கடந்த 9 மாதங்களுக்கு முன் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிகாணாமல் போனார். அந்த சிறுமியை திருவாரூர் அருகே நடப்பூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்ற நபர் கடத்திச்சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சதீஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் 9 மாதங்களாக சதீஷை தேடி வந்தனர். 

இந்நிலையில் சதீஷின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், சதீஷ் சிவகங்கையில் இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா உத்தரவின் பேரில், சிவகங்கை விரைந்த தனிப்படை போலீசார் சதீஷை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் சிக்கியிருந்த 16 வயது சிறுமியை மீட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சதீஷை, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.