பஞ்சாப்பில் உளவுப்பிரிவு தலைமை அலுவலகத்தில் ராக்கெட் வெடிகுண்டு வெடிப்பு…வெளியான சிசிடிவி காட்சிகள்!

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில், உளவுப்பிரிவு தலைமை அலுவலகத்தில் ராக்கெட் வெடி குண்டு வெடித்து சிதறியபோது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

திங்கட்கிழமை இரவு, உளவுப்பிரிவு தலைமை அலுவலக கட்டிடம் அமைந்துள்ள சாலையில் இருந்து கையெறி குண்டு வீசப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படாத போதும், அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சுக்குநூறாக நொறுங்கின.

இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள காலிஸ்தான் அமைப்பினர் இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.