புயல்காற்று வீசியதால் உத்தரகாண்டின் தெஹ்ரி ஏரியில் 25 படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம்… நீரில் விழுந்து தத்தளித்த 4 சுற்றுலாப் பயணிகள் மீட்பு

உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் ஏரிப் பகுதியில் வீசிய பலத்த புயல் காற்று காரணமாக ஏராளமான படகுகள் சேதம் அடைந்துள்ளன.

ஏரியில் சுற்றுலா சென்ற பயணிகள் பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். சுமார் இரண்டு டஜன் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி கடும் சேதம் அடைந்துள்ளன.

படகுகளின் எஞ்சின்கள் ஏரி நீரில் மூழ்கின. ஏரியில் தத்தளித்த 4 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.