பைக் விபத்தில் தந்தை, மகன் பலி| Dinamalar

சாம்ராஜ்நகர் : பைக் மீது கார் மோதிய விபத்தில், தந்தையும், மகனும் உயிரிழந்தனர்.மைசூரின் நஞ்சன்கூடில் வசித்தவர் சசிகுமார், 35. இவரது மனைவி சைத்ரா, 40. தம்பதிக்கு தர்ஷன், 6; ககன், 5, என்ற மகன்கள் உள்ளனர்.சசிகுமார் நேற்று காலை பைக்கில் குடும்பத்துடன் சாம்ராஜ்நகர், குண்டுலுபேட்டின் ஹிரிகாடி கேட் அருகில் செல்லும் போது, கார் மோதியது. இதில் தந்தையும், மகன் தர்ஷனும் உயிரிழந்தனர். தாயும், மற்றொரு மகன் ககனும் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர். பேகூரு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.