போர் ஆயுத நிபுணர்கள் குழப்பம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஹாங்காங்: நம் அண்டை நாடான சீனாவின் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல், அதிரடி தாக்குதல் நடத்தக் கூடிய நீர்மூழ்கி கப்பலாக இருக்கலாம் என, சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது.

சீனாவின் லியோனிங்க் மாகாணத்தில் உள்ள ஹூலுடாவ் துறைமுகத்தில், சமீபத்தில் ஒரு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. இது, நீர்மூழ்கி கப்பல் என்பது, ‘சாட்டிலைட்’ படங்களில் இருந்து தெரியவந்துள்ளது. கடலில் மிதக்கும் கப்பல்கள் மற்றும் நீருக்கு அடியில் இருக்கும் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கக்கூடிய, அதிக திறனுடைய ‘ஹன்டர்’ வகை நீர்மூழ்கி கப்பல்கள் சீனாவிடம் இல்லை. அடுத்த சில ஆண்டுகளில், இதுபோன்ற நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக, கடந்தாண்டு நவம்பரில், அமெரிக்க ராணுவம் எச்சரித்திருந்தது.

latest tamil news

இந்நிலையில், ஹன்டர் போன்ற அதிக திறனுள்ள நீர்மூழ்கி கப்பல், சீன துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, போர் ஆயுத நிபுணர்கள் இடையே குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல், புதிதாக உருவாக்கப்பட்டதா அல்லது ஏற்கனவே இருந்த நீர்மூழ்கி கப்பல் மேம்படுத்தப்பட்டு உள்ளதா என்ற விபரம் தெரியவில்லை.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.