போலி சான்று கொடுத்து பதவி உயர்வு பெற்ற 7 பேர்… சான்றிதழ்களை ரத்து செய்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடவடிக்கை!

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் சமர்ப்பித்து பதவி உயர்வு வாங்கிய 7 பேரின் சான்றிதழ்களை ரத்து செய்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியரல்லா பணியாளர்களாக பணியாற்றும் 7 பேர், தட்டச்சுத் தேர்வு எழுதி தேர்வானதாக போலிச் சான்று சமர்ப்பித்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில், அவர்களது  சான்றிதழ்களை ரத்து செய்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அவர்களுக்கு உதவிய தனியார் தட்டச்சு பயிற்சிப்பள்ளி நிறுவனத்தின் உரிமத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.