முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ திருகோணமலை கப்பல்துறையில்

பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ திருகோணமலை கப்பல்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (11) கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்

‘நாட்டின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், முன்னாள் பிரதமர் அவர் விரும்பும் இடத்திற்கு ,பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார். அனைத்து பிரஜைகளையும் பாதுகாக்கும் கடப்பாடு உண்டு அதன் அடிப்படையில் நாம் செயல்பட்டு வருகின்றோம்’ என்றும் பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.