யுபுன் அபேகோன் நாளை ரோம் தடகள போட்டியில் பங்கேற்பு…

இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் நாளை (12) தனது இரண்டாவது தடகள போட்டியில் பங்கேற்க உள்ளார்.

இந்த ரோம் தடகளப் போட்டி இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறவுள்ளது.

போட்டிஅட்டவணைக்கு அமைவாக  யுபுன் 150 மீட்டர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

கடந்த மாதம், 2022 ஆம் ஆண்டின் முதல் வெளிப்புறப் போட்டியில் யுபுன் பங்கேற்றார். யுபுன் 150 மீற்றர் தூரத்தை 15.16 வினாடிகளில் ஓடி புதிய ஆசிய சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.