Elon Musk: ட்விட்டரில் அதிரடி மாற்றம் – கோரிக்கை வைத்த தாய்!

Twitter
Edit Button
Feature: சமீப நாள்களில் உலகில் அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவர்
எலான் மஸ்க்
மாறியிருக்கிறார். எலான் மஸ்க் மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல்வேறு காரணங்களால் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.

சில நாள்களுக்கு முன்பு ட்விட்டரை 44 பில்லியனுக்கு, அதாவது இந்திய மதிப்பில் 3.3 லட்சம் கோடி ரூபாய்க்கு டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் வாங்கினார். மஸ்க் நிறுவனத்தின் முழு உரிமையையும் இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், ட்விட்டரில் வரப்போகும் புதிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வதந்தியாகி வருகின்றன.

அத்தகைய ஒரு அம்சம் Edit பட்டன். கடந்த சில ஆண்டுகளாகவே
ட்விட்டர்
வாசிகள் இந்த வசதியை கோரி வருகின்றனர். மஸ்க் இதற்கும் சூசகமாக பதிலளித்திருந்தார். ட்விட்டர் அதற்கான வேலைகளையும் செய்து வருதாக தெரிவித்திருந்தார். இப்போது மஸ்க்கின் தாய் மாயே மஸ்க்கும் இந்த அம்சத்தைப் குறித்து கேட்டுள்ளார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் தாயார் மாயே மஸ்க்கும் ட்விட்டரில் எடிட் பட்டனைக் கோரியுள்ளார். தாஜ்மஹாலுடன் இருக்கும் புகைப்படத்தை மேய் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

TikTok: விண்வெளியில் டிக்டாக் வெளியிட்ட பெண் – வைரல் வீடியோ!

எடிட் பட்டன் கோரிய எலான் மஸ்க் தாய்

அந்த புகைப்படத்தை பதிவிட்ட அவர், 2007 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தாஜ்மஹாலை பார்க்க வந்ததாக எழுதியிருந்தார். இருப்பினும், இந்த ட்வீட்டை மீண்டும் ரீட்வீட் செய்த அவர், இது 2007இல் இல்லை என்றும், 2012-இல் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறினார்.

மேலும், இதனை மாற்ற எடிட் பட்டன் எங்கே? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். ட்விட்டர் பயனர்களும், எலான் மஸ்க் தாயின் ட்விட்டர் பதிவுக்கு தொடர்ந்து பதிலளிக்க, அந்த பதிவு சூடுபிடிக்கத் தொடங்கியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பயனர்கள் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.

ட்விட்டர் பயனர்கள் கூறுவது என்ன?

இதற்கு பதிலளித்துள்ள ஒரு ட்விட்டர் பயனாளர், “இப்போது என் அம்மா என்னிடம் சொன்னார். எனவே நான் அதை கேட்க வேண்டும்.” என்று சூசகமாக பதிவிட்டுள்ளார். அதாவது, தாயே சொல்லிவிட்டார், மறுக்காமல் அந்த வசதியை கொண்டு வாருங்கள் என மஸ்குக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விரைவில் எடிட் பட்டன்

பல ஆண்டுகளாக ட்விட்டரில் எடிட் பட்டனை பயனர்கள் கோரி வருகின்றனர். வெளியாகி உள்ள தகவல்களின்படி, சந்தா அடிப்படையில் இயங்கும் சேவையான ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு எடிட் பட்டன் அம்சம் முதலில் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது.

முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% விழுக்காடு பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், பின்னர் மொத்த நிறுவனத்தையும் ரூ.3.3 லட்சம் கோடி கொடுத்து வாங்கினார். ட்விட்டரை வாங்கி கையோடு, அதன் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் புதிய அம்சங்கள் கொண்டுவரப்படும் எனவும் மஸ்க் உறுதி அளித்துள்ளார்.

Elon Musk Tweet: ‘நான் மர்மமான முறையில் இறந்தால் …’ – எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி ட்வீட்!

எலான் மஸ்க் ட்வீட்
“நான் ஒரு வேளை மர்மமான முறையில் இறந்தால்” என்று மஸ்க் ட்வீட் செய்திருந்தது இணையத்தில் வைரலாகி இருந்தது. இதற்கு அவரது தாய் மாயே மஸ்க், “இது ஒன்றும் விளையாட்டு காரியமல்ல” என்று கருத்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். தொடர்ந்து தன் தாய்க்கு பதில் அளித்திருந்த மஸ்க், “மன்னிக்கவும். என்னால் முடிந்த அளவு பாதுகாப்பாக இருக்க நான் முயற்சிப்பேன்” என்று பதிவிட்டிருந்தார். இந்த உருக்கமான ட்வீட் உரையாடல் இணையத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.

மேலதிக செய்திகள்:

Russia Ukraine News: போர் காலத்தில் உக்ரைன் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் 5 ஆப்கள்!Nokia N73: ஞாபகம் வருதே… பெயர் தான் பழசு; ஆனா அம்சமெல்லாம் புதுசு!Cyclone Asani: அசானி புயலை நீங்களும் கண்காணிக்கலாம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.