இலங்கையின் புதிய பிரதமருக்கு மகிந்த ராஜபக்சே வாழ்த்து

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரதமர் பதவியேற்பார் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று அறிவித்திருந்தார்.

தொடர்ந்து, ஐக்கிய தேசிய கட்சி தலைவராவன ரனில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். 15 பேரை கொண்ட புதிய அமைச்சரவையும் நாளை காலை பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரனில் விக்ரமசிங்கேவுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்போது அவர், இக்கட்டான சூழலில் பொறுப்பேற்றுள்ள நிலையில் நாட்டை சிறப்பாக வழிநடத்த வாழ்த்துகள் என மகிந்த ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்..
இலங்கையின் புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.