இலங்கை அரசியலில் திருப்புமுனை! பிரதமரானார் ரணில் விக்ரமசிங்க.. வெளியான புகைப்படம்


இலங்கையில் தற்போது  ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ள நிலையில் இன்று மாலை புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகி வந்த வண்ணம் இருந்தது. 

இந்தநிலையில் நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.  

இந்த விடயம் தொடர்பில் தற்போது இறுதிக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரச தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்து வந்தநிலையில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இலங்கையின் அடுத்த பிரதமராக சற்றுமுன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். 

இலங்கை அரசியலில் திருப்புமுனை!  பிரதமரானார் ரணில்  விக்ரமசிங்க.. வெளியான புகைப்படம்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.