இலங்கை புதிய பிரதமராக ரணில்விக்கிரமசிங்கே பதவி ஏற்பு…

கொழும்பு: இலங்கையின்  புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டு உள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். தற்போது அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே பதவி பிரமாணம் செய்து வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, பிரதமர் பதவி தொடர்பாக, ரணில் விக்கிரமசிங்கேவுடன் கோத்தபய தொலைபேசியில் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அப்போது, குறுகிய காலத்திற்காவது பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்ற கோத்தபயவின் கோரிக்கையை ரணில் ஏற்று கொண்டுள்ளார். ரணிலை பிரதமராக்குவதற்கு, பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.