உதய்பூர் சிந்தன் ஷிவிரில் ராகுல் காந்தியை கட்சித் தலைவராக்க வேண்டும் – கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

உதய்பூர்:
ராகுல் காந்தியை கட்சித் தலைவராக்க வேண்டுமென உதய்பூர் சிந்தன் ஷிவிரில் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

வரவிருக்கும் 2024 பொதுத் தேர்தலுக்காக கட்சியை ஒருங்கிணைப்பது குறித்தும், பாஜகவுக்கு சவால் விடும் வியூகத்தை வகுக்கும் வகையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் உதய்பூரில் ‘சிந்தன் சிவிர்’ நிகழ்ச்சி நடக்க உள்ளது.

உதய்பூரில் நடைபெறவுள்ள அடுத்த சிந்தன் ஷிவிரின் போது, ​​காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களில் கட்சி படுதோல்வியடைந்ததன் பின்னணியில் சிந்தன் ஷிவிர் நடத்தப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் கட்சி பல தோல்விகளை சந்தித்துள்ளது.

அடுத்த சிந்தன் சிவிர் கூட்டம் மே 13 ஆம் தேதி சோனியா காந்தி மக்களிடம் உரையாற்றி தொடங்கி மே 14 ஆம் தேதி ராகுல் காந்தியின் உரையுடன் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.