ஐபிஎல் : மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தடுமாற்றம்

மும்பை,
 ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற மும்பை  அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது .

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டேவான் கான்வே ,ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர் .தொடக்கத்தில் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமலும்  ,ராபின் உத்தப்பா 1  ரன்களில்,ருதுராஜ் கெய்க்வாட்  7 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்  ,
இதனால் சென்னை அணி4 விக்கெட்டுக்களை இழந்து ரன்கள் எடுக்க தடுமாறி வருகிறது .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.