க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி, ரயில் டிக்கெட் பெறும் வசதியை அறிமுகம் செய்தது தெற்கு ரயில்வே..!

க்யூ.ஆர் கோட் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயில் நிலையங்களில் டிக்கெட் பெற பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் புதிய வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கனவே உள்ள தானியங்கி டிக்கெட் விநியோக எந்திரங்களில் க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

சீசன் டிக்கெட்டுகளை புதுப்பித்தல், ஸ்மார்ட் கார்டுகளை ரீசார்ஜ் செய்தல் உள்ளிட்ட பணிகளை இந்த க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.