சித்தராமையாவுக்கு பா.ஜ., பதிலடி| Dinamalar

பெங்களூரு : ‘விழித்துக் கொள்ளுங்கள்’ என, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு, பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.இது குறித்து, ‘டுவிட்டரில்’ பா.ஜ., நேற்று கூறியிருப்பதாவது:விழித்துக் கொள்ளுங்கள் என, நீங்கள் கூறியது உங்கள் கட்சியின் மேலிட தலைவர் சோனியாவுக்குத்தானே.

2014ல் நாட்டு மக்கள் விழித்துக் கொண்டதால், நாடு காப்பாற்றப்பட்டது.கர்நாடகா எச்சரிக்கை அடைந்ததால், 2018ல் மோசமான ஆட்சிக்கு விடுதலை கிடைத்தது. இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு, அங்குள்ள கட்சிகளின் குடும்ப அரசியலே சாட்சியாகும்.நீங்களும் கூட, இத்தகைய குடும்ப அரசியல் கட்சியின் சேவகன். போலி காந்தி குடும்பத்தின், மோசமான ஆட்சியில் வெறுப்படைந்த மக்கள், காங்கிரசுக்கு பாடம் கற்பித்தனர். இனியும் பாடம் கற்பிப்பர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.