சிவகாசி அருகே தெருநாய்கள் கடித்து புள்ளிமான்கள் சாவு

சிவகாசி: சிவகாசி பாறைப்பட்டி போலீஸ் செக் போஸ்ட் அருகே மாநகராட்சி 33வது வார்டு பிஜேபி கவுன்சிலர் குமரிபாஸ்கர் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நேற்று 2 புள்ளி மான்கள் சுற்றி திரிந்துள்ளது. அப்போது தெரு நாய்கள் விரட்டி சென்று மான்களை கடித்துள்ளது. இதில் 2 மான்களும் சம்பவ இடத்திலே உயிரிழந்தன . வனத்துறை அலுவலர்களுக்கு சிவகாசி கிழக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் மான்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.