திரு.ஈ.எம்.எஸ்.பி.ஏக்கநாயக்க பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்…

பிரதமரின் செயலாளராக திரு.ஈ.எம்.எஸ்.பி.ஏக்கநாயக்க அவர்கள், இன்று (12) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

திரு. ஏக்கநாயக்க அவர்கள், இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். 2015 – 2019 காலப்பகுதியில் மூன்று தடவைகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் செயலாளராக கடமையாற்றிய அவர், நான்காவது தடவையாகவும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

திரு. ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க அவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது முதல் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றவராவார். இவர்  தனது 30 வருடங்களுக்கும் அதிகமான  நிர்வாக சேவையில், இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமுர்த்தி, வீடமைப்பு, கைத்தொழில், வெளிவிவகார மற்றும் நிதி ஆகிய அமைச்சுக்களிலும், மலேசியா மற்றும் இலண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயங்களிலும்  சேவையாற்றியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

12.05.2022

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.